ஒருசமயம், தெனாலிராமன் அரசவையில் இருந்தபோது, தூக்கம் கண்ணைச் செருகியது. அதைக் கண்டு உறுப்பினர்கள் சிரித்து விட்டனர்.
அப்போது அமைச்சர், “அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்” என்றார். அரசரிடம் பதில் இல்லை.
மறுநாள் அரசர், “என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்” என்றார்.
அமைச்சர், “வெள்ளி நகை தான்...” என்றார்.
அரசகுரு, “பால் தான்!'' என்றார்.
சிலர், “சம்பா மலர்!'” என்றனர்.
வேறு சிலர், “மல்லிகை தான்”' என்றனர்.
இன்னும் சிலர், “சுண்ணாம்பு தான்!” என்றனர்.
அரசர் திருப்தி அடையவில்லை. தெனாலியிடம் கேட்டார்.
“நாளைக்குக் கூறுகிறேன்” என்றார் தெனாலி.